புதன், ஆகஸ்ட் 31, 2011


                    hi friend.................
                       natpin 
                       kaikodupil
                       sirija mujatsi
                       natpitku nanri

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

Gre

தாய்மை...

posted May 8, 2011 8:54 PM by Boobalan Munusamy



அம்மா,
அணுவைச் சிதைத்து
ஏழ்கடலைப் புகட்டிப்
பொதுவாய் நின்ற
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா...!

உலக வாழ்க்கைக்கு
அப்பாற்பட்ட ஓர் உண்மை
உயிர்பெற்று உலவுகிறது
இவ்வுலகில்...!


அம்மா என்ற மூன்றெழுத்து ,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில்
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்...!


ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா...!


ஆண்டாண்டு அழுதுபுரன்டினும்
ஆண்களுக்குக் கிட்டாத ஓர்
அரிய உணர்வு,தாய்மை...!ateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

Friends are kept forever in the heart...

posted Jul 5, 2011 5:33 AM by Boobalan Munusamy [ updated Jul 5, 2011 7:50 AM ]

உன் நட்பெனும்
சிறையில்லா கூண்டில்
சிறகில்லா பறவை நான்!..
விடுதலையாக விருப்பம் இல்லை,
இந்த உலகை விட
உன் நட்பு பெரியதானதால்...GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

காதல்...

posted Jul 17, 2011 8:58 PM by Boobalan Munusamy

Love poets
GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

என்னை அறியாமலேயே...

posted Jul 28, 2011 8:26 PM by Boobalan Munusamy


laugh

இப்போதும்

அடிக்கடி

உன் நினைவுகள்

எழும்,

சில் மிஷங்களும்

பரிமாறல்களும்

என்னை அறியாமலேயே

உதட்டில்

புன்னகையைத் தோற்றுவிக்கும்,

வீதியில் போகும் போது

நான் அடிக்கடி சிரிப்பதாக

தெரிந்தவர்கள் கூறுவார்கள்

காரணம் இதுவாகவும்

இருக்கலாம்,

நானும்

பலர் தன் பாட்டிற் சிரிப்பதை

வீதிகளில் கண்டிருக்கிறேன்

அவர்களுக்கும்

இது தான் காரணமோ தெரியவில்லை,

ஆனாலும்

கடந்த காலங்களைப்போல

அந்தச் சிரிப்புக்கு பின்னர்

எழுவதான

’கண்ணீரும் மனச்சோர்வும்’

இப்போது

இல்லை என்றே கூறுவேன்,

ஆயினும்

உன் நினைவுகள்

அடிக்கடி எழும்

ஏதோ எழுதுவேன்

மெளனமாவேன்..

GreateIndiaClub-தமிழ் காதல் கவிதைகள்

இருக்கும் மனிதா.....!

இருக்கும் மனிதா.....! 

இருக்கும் மனிதா.....!
உனக்கென பிறக்கும்
உயிருக்கு போக
எஞ்சி இருப்பதை
எங்கோ பிறக்கும்
உயிருக்கு கொடுத்து
பார் .....!

தனக்கென வாழும்
வாழ்வில் இருக்கும்
அமைதியை விட .....!

பிறர்க்கென வாழ்ந்து
பார் இப்பார் உலகும்
வளம் பெரும் ......!

புன்னகை

  உன் கவலைகளுக்காக

என்னை ஏன் சிறை வைக்கிறாய்?